ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வன்கொடுமை தடுப்பு சட்டம் (P.C.R Law) மூலம் பழிவாங்கபடுகிறது:சமிபத்திய உண்மை நிகழ்வு

வணக்கம்,

சமிப காலமாக வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக (P.C.R Law) பயன்படுத்தபடுகிறது என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு சாட்சியாய் அமைந்துள்ளது ஒரு சம்பவம் திருவண்ணாமலை அருகில் உள்ள சின்ன கோளாபாடி என்ற கிராமத்தின் நிகழ்வு.


இந்த கிராமத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 1 பெண் உட்பட 3 பேர் இச்சட்டத்தின் மூலம் விசாரணையின்றி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சில குடும்பம் பிற்படுத்தப்பட்ட இனத்தவரின் விவசாய நிலம் அருகே வசித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட இன பெண் விவசாயிகள் நிலத்தில் வேலைசெய்யும் பொது தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சிலர் குடித்துவிட்டு  வாய்க்கு வந்தபடி தவறான வார்த்தைகளால் திட்டுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் அதிகமாகி வந்துள்ளது.

 சென்றவாரம் திங்கட்கிழமை (4-2-2013) அன்று  காலை அந்த நிகழ்வு உச்சகட்டத்தை அடைந்தது. அன்று அந்த பிற்படுத்தப்பட்ட இன விவசாயி தகராறு செய்தவர்களை பற்றி  ஊர் பெரியவர்கள் முன்  முறையிட்டார். ஊர் நாட்டாமை,பெரியவர்கள் இருதரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தினர் அங்கு அந்த தாழ்த்தப்பட்ட இன நபர் இனிமேல் இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என கூறி தன்வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

அதன் பிறகு  தன் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளை தொடர்புகொண்டு,அந்த அமைப்புகள் உதவியோடு  பிற்படுத்தப்பட்ட இன குடும்பத்தினர் மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரும் பிற்படுத்தப்பட்ட இன விவசாயியை காவல்நிலையம் வரவழைத்துள்ளனர் . திங்கட்கிழமை (4-2-2013) மாலை விவசாயி தன்குடும்பத்தோடு (விவசாயி, விவசாயின் தந்தை, விவசாயின் மனைவி) காவல்நிலையம் சென்றபோது தகராறு செய்த தாழ்த்தப்பட்ட இன நபர் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளுடன் காவல் நிலையத்தில் இருந்தார்.

அப்போது அந்த அமைப்புகள் காவல் துறையினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) FIR பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையினர் முதலில் விசாரிக்கலாம் என்று கூறினார். அதற்கு தாழ்த்தப்பட்டோர்  அமைப்பினர் இப்பொழுது PCR சட்டத்தில் வழக்கு (FIR) போடுறிங்கள ,இல்லை உங்கள் (காவல் அதிகாரி) மீதே PCR பாயும் அளவிற்கு இப்பொழுதே காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டி விவசாயின் குடும்பத்தினர் மீது PCR சட்டத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டனர்.
 கைது ஆனவர்கள் தற்பொழுது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமிப காலமாக தமிழகத்தில் இதுபோன்ற பழிவாங்கும் செயல் அதிகரித்து வருவதை சுட்டி காட்டும் சம்பத்தில் இதுவும் ஒன்று. ஆகவே புகார் கொடுத்தால் விசாரணையின்றி FIR பதியும் என்ற சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டும். இதை தற்போழு தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) திருத்தம் வேண்டும் என்று அரசியல் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் போராடி வரும் ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு மட்டுமே. அவர் போராடுவதை கண்மூடி தனமாக சில பிற்படுத்தப்பட்ட இனத்தவர் எதிர்கின்றனர்.எதிர்பவர்கள் இதுபோன்ற சம்பத்தை மனதில் வைத்து கருத்து கூறவேண்டும்.


கைது செய்யப்பட்ட விவசாயி குடும்பத்தினருக்கு அரசியல் பாகுபாடின்றி பா.ம.க உதவவேண்டும் .

1 கருத்து: